This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

சனி, 13 டிசம்பர், 2014

பதிப்புரை - சிந்தனை வட்டம்



கடந்த இரண்டு தசாப்தங்களாக கல்விசார், அறிவியல் நூல்களை வெளியிட்டு வந்துள்ள எமது "சிந்தனை வட்டம்" வாசக நெஞ்சங்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து இலக்கிய நூல்களையும் வெளியிடவுள்ளதென்பதைத் தங்களுக்கு அறியத்தருவதில் பெருமிதமடைக்கின்றோம்.

ஈழத்து இலக்கியவானில் தமிழ் பேசும் பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அதிலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களோ மிகமிகக் குறைவு. விரல்விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்களிடையே சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி குறிப்பிடத்தக்கவர்.

மீன்பாடும் தேனாடாம் கிழக்கிலங்கையில் சாய்ந்தமருது பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 1980 கலீல் எழுதத் தொடங்கியவர். கவிதை,சிறுகதை,விமர்சனம் என இலக்கியத்தின் பல வடிவங்களில் தனது சுவட்டினைப் பதித்துள்ளவர். இவரால் எழுதப்பட்ட மரபுக்கவிதைகளுள் 40 கவிதைகளைத் தொகுத்து "தேன் மலர்கள்" எனும் மகுடத்தில் நூலாக வெளியிடுகின்றோம்.

இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஒருவரின் முதல் மரபுக்கவிதை தொகுதி என்ற வகையில் இக்கவிதைத் தொகுதி சிறப்புப்பெறும் அதேநேரத்தில், "சிந்தனை வட்ட" வெளியீடுகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவு தரும் வாசக நெஞ்சங்கள் இந்நூலுக்கும் தமது ஆதரவினைத் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

சமர்ப்பணம்



 கரம் பிடித்து மண்ணில் எழுத 
 கற்றுத் தந்து 
கல்வி வித்தினை எந்தன் 
கருவில் விதைத்து 
முயற்சிக்கனியினை சமூகத்திற்குப் 
பிரயோசனம் அளிக்கும் படியாய் 
எழுதச் சொன்ன என்னுயிர் 
அன்புத் தந்தை 

மர்ஹூம் வைத்தியக் கலாநிதி 
யூ.எல்.ஏ. மஜீத் (ஜே.பி)
அவர்களுக்கு இந்நூல் அன்புக் காணிக்கை 

மறப்பது எங்ஙனஞ் சேடி....!


கொள்ளை யடித்தன னெந்தன கத்தினைக் 
கூடிய மர்ந்தனன் பின்னே - அன்புத் 
தொல்லை கொடுத்தனன் தொகை யெனக்குள்ளே 
தொடர்ந்து உதித்தனன் கள்வன் 
வெள்ளை யுளத்தினில் தாமரை போலவன் 
விரிந்து கிடந்தனன் நித்தம் 
எல்லையிலாதொரு இன்ப உணர்ச்சியில் 
என்னை மயக்கினன் சேடி....! 

நந்த வனத்தினி லன்றொரு நாழிகை 
நாயகனென் கரம் பற்றி 
சிந்தை குளிர்ந்திடச் சேர்த்து அணைத்தின்பச் 
சேதிகள் செப்பினன் சேடி 
எந்த னெழில் உடல் வந்து தழுவிட 
தென்ற லிடத்தினைத் தேடும் 
அந்த நற் பொழுதினை யானும் மறந்திடல் 
ஆகுவ தெங்ஙனஞ் சேடி....!

ஆண்மைக்கவன் நல் இலக்கணமாகுவான் 
ஆமிது மெய்யடி சேடி 
வீண் புகழ்ச்சியை வெறுத்து ஒதுக்குவான் 
வீரனென் காதலன் சேடி 
வான் தரும் மழை போலவன் அன்பு 
வரவு நிகழ்ந்திடுஞ் சேடி 
மான் விழிக்கவன் மகிழ்வினை யூட்டினன் 
மறப்பது எங்ஙனஞ் சேடி....!

தவமழை புனித குர்ஆன்....!



அறியாமை இருளில் மூழ்கி 
அகிலத்து மக்க ளெல்லாம் 
இறையோனை மறந்து பொல்லா 
ஈனராய் வாழ்தல் கண்டு 
நெறியோறாய் அவரை மாற்றி 
நிம்மதி வாழ்வில் காண 
இறையோனின் தூதர் மூலம் 
இறங்கிய புனித குர் ஆன்.....!

கல்லையே கடவு ளென்று 
கண்ணிலா வழி நடந்து 
இல்லையோர் தெய்வ மென்று 
இதயத்தில் மடமை கொண்டு 
புல்லையே பூக்க ளென்று 
புனிதத்தை மறந்து நின்றோர் 
அல்லலை அகற்ற அல்லாஹ் 
அருளிய புனித குர்ஆன்....!

மங்கையர் தம்மை மண்ணில் 
மதித்திடா வண்ணம் மூடர் 
எங்கணும் கொடுமை செய்யும் 
இழி நிலை தன்னை மாற்றிப் 
பொங்கிடு மொளியை இந்தப் 
பூவுல கெங்கும்  ஏற்றி 
தங்கமாய் இறைவன் தந்த 
தவமழை புனித குர் ஆன்....!

வெள்ளி, 12 டிசம்பர், 2014

விடிவு என்று....??



ஏழைக்கு இல்லை இன்பம் 
இருப்பது யாவுந் துன்பம் 
கூழையே கண்டால் இன்பம் 
கொடுமைதான் வறுமைத் துன்பம் 
நாளையோர் விடிவை எண்ணி 
நலமுடன் வாழ எண்ணும் 
வாழை போல் மடியு மிந்த
மாந்தருக் கென்று இன்பம்.....?

மாடென உழைத்தே ஈற்றில் 
மனத்துயர் மட்டும் மிஞ்சும் 
பாடுகள் பட்டே பின்னால் 
பலனது பூஜ்ஜியம் தான் 
மாடியை நிமிர்ந்து நோக்கும் 
மனிதர்கள் இவர் களாலே 
மாடிகள் தன்னில் வாழ்வோர் 
வதிகிறார் பணத்துக்குள்ளே....!

குளுகுளுப் பான இல்லம் 
குடித்திட "உயர்ரகங்கள்"
வழு வழுப்பான காரில் 
வாழுவர், அவர்க்குச் சொர்க்கம் 
அழுகையே காணும் ஏழை 
அன்னவர்க் கிது நரகம்  
பழுவான வாழ்க்கைப் பேறு 
பார்த்திட வருவார் யாரு.....?

துணைவன் வேண்டும்


சீதனம் எதுவு  மில்லை
சீ ர்மைக்கு  பஞ்ச மில்லை
ஆதனம் அதுவும் மில்லை
அழகினில் குறைச் சலில்லை
பேதையென்வாழ்வில் ஒன்றாய்
பிணைந்திட வரனும் இல்லை !

கல்வியும் கற்றேன் - நல்ல
கனிவினை உளத்தில் பெற்றேன்
சொல்லினில் தெளிவு கொண்டேன்
சுயநலம் துளியும் இல்லை
நல்லதோர் துணைவன் என்னை
நாடியே வரவும் இல்லை

குடிசை தான் வாழ்க்கை - ஆனால்
கோபுரம் என்றன் உள்ளம்
நடிகையாய் வாழ்வில் மாறும்
நரித்தனம் எதுவும் இல்லை
அடிமையாய் என்னை அன்பால்
ஆண்டிட ஆளன் வேண்டும்

அந்நிய நாட்டுக் கென்னை
அனுப்பியே உழைக்கத் தூண்டி
தின்றிடத் துடிக்கும் பேயர்
தேவையே இல்லை - ஆண்மை
தன்னகம் கொண்டு வாழும்
தகைமை சேர் துணைவன் வேண்டும்.....!

உழைப்பிற்கு ஊதியம் தா....!


கூடையிலே கொழுந் தெடுத்தும் 
கூழுக்கே அடி பிடிகள் 
கோடையிலும் குளிரினிலும் 
கூடுதலை எம் நேரம் 
வாடி விடும், ஆனாலும் 
வயிற்றுக்கு வழியில்லை...!

உழைப்பதற்கு ஊதியத்தை 
ஒழுங்கின்றித் தருபவரும் 
பிழைப்பிற்கு வழியற்றுப் 
பெரும் பாவம் புரிபவரும் 
சளைக்காமல் வாழுகின்ற 
சந்தோஷ நேர முண்டு....!

நாளை வரும் என்று மனம் 
நம்பிக்கை கொண்ட தெலாம் 
பாழாகிப் போன தந்தோ 
படித்திட்ட மாந்த ரெலாம் 
ஏழைகளை எந் நாளும் 
எரிச்சலுடன் நோக்குகிறார்.....!

நாட்டிற்கு முது கெலும்பு 
நாமென்று வார்த்தைகளால் 
பாட்டிசைத்து வாழுகின்ற 
பாவிகளே, எங்களது 
வீட்டிற்குப் பணம் தேவை 
வியர்வைக்குப் பணம் கொடுங்கள்....!